Tuesday, December 11, 2007

பாரதி நெஞ்சம்!

மொழிப்புலம் காத்திட,
வழிப்புலம்
செய்திருப்பான!
தமிழரைக் காத்திட,
தாண்டியும்
சென்றிருப்பான்!

தோள் வலியால்,
தமிழ்த் தேசியத்தைக்
காத்திருப்பான்!

இன்னலை எதிர்கொள்வதில்,
இன்முகம்
காட்டியிருப்பான்!
இறும்பூது
அடைந்திருப்பான்!

இமயத்தில் உலாவிய நீ,
தென் திசையை ,
இலகுவில் கடந்திருப்பாய்!

இந்திய தேசத்திற்கு,
இறவாப் புகழ்
சேர்த்திருப்பாய!

புதுப்பரணி பாடி,
தரணி புகழ்
தமிழனுக்கு
சேர்த்திருப்பாய!

சோம்பல் தமிழனின்
சோதனை தீர,
சூடேற்றியிருப்பாய்!

காட்டுத்தீயாய்
சனாதனவாதிகள்
சட்டையை உரித்திருப்பாய்!

உரிமைக்காத்திட,
ஊரைத் திருத்திட,
உலக்கையாய்
இடித்திருப்பாய்!
உணர்வை
எழுப்பியிருப்பாய்!

கடல் கடந்து வாழும்
தமிழரின் ,
களை இழந்த,
நிலை உயர்த்திட!
ஏவுகணையாய்!

கண்டம் விட்டு
கண்டம்,
பாய்ந்திருப்பாய்!

காவிகளை மிதித்து
காவியம் நிகழ்த்த!
தமிழனின்
தனி மானம்,
பதித்திருப்பாய!

காலனை உதைக்கும்
வைர நெஞ்சம!
அஞ்சா நெஞ்சம்!

கோள் வாழ் குறை
கொதித்து,
மிதித்து,
கோணல் நிமிர்த்தியிருப்பாய!

குயில்களின் சோலை
எங்கும் புதுக்கி ,
புதுமை
கூட்டியிருப்பாய் !

காற்றும் மழையும்,
வானும், நீரும்,
நிலமும்,
மலையும், காடும்

நீக்கமற நிறைந்திடும்
புதுப் பாரதம்,
சூழல்
மாற்றியிருப்பாய!

No comments: