Tuesday, December 18, 2007

யாருக்காக?

உணவு பாதுகாப்பு
2008ல்,

* இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலை மிகவும் அதிகரிக்கும;

* வேளாண்மை உணவுப் பண்டங்கள் உற்பத்தி மிகவும் குறைந்து போகும;

* ஐ.நா. மன்றத்தின் புள்ளி விவரப்படி,கிராமப் பகுதியில், தானியங்கள் நபர் ஒன்றுக்கு,
152 கிலோ கிராம் மட்டுமே கிடைக்கிறது.
* 1990ல் கிடைத்த அளவிற்கு 23 கிலோ கிராம் குறைவாகவே கிடைக்கிறது.

* மிகுந்த வறிய நிலையில் உள்ள மக்களில் 30% விழுக்காட்டினர்,

நபர் ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 1700 கலோரிகள் மட்டுமே உட்கொள்கின்றனர்,

* உலக நாடுகளின் குறைந்த பட்ச தரம், 2100 கலோரிகள், நாள் ஒன்றுக்கு

70% சதவீத வருவாய் செலவு செய்து, 1700 கலோரிகளுக்கும் குறைவான உணவு சாப்பிட்டு வாழும் சூழலில், வளர்ச்சி வீதம்; உயரமான கட்டிடங்கள்; கணணி வளாகங்கள்; அழகிய தார்சாலைகள்; புதிய தொழிற்சாலைகள் போன்ற புற வளர்ச்சி நிலைகள். யாருக்காக?

66% விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு 20 உருவாய்க்கும் குறைவான வருவாயில் ! அரசியல் சட்டம் சொல்லும்"இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே அளித்துக் கொண்ட..." யாருக்காக?

No comments: