Monday, December 24, 2007

உதயமானேன்!

தமிழா!
நம்பினேன்!
உருப்படுவாய் !
உரிமை காப்பாய் !

மொழி காப்பாய்!
வழி திறப்பாய்!
என்று!

விழித்திருந்து,
உறங்க வைத்தாய்!
உரிமை கிறங்க
வைத்தாய் !

'சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்பாய்'
என்று!
நீ !
சேத்துப்பட்டில்
வீதி சமைத்தாய் !

சோத்துப் பாட்டிற்கு
கையேந்தும் சோதனை!
தமிழ்நாடு!

சாதனை செய்ய
ஏன் மறந்தாய்?

திக்கெட்டும் செல்வாய்!
செல்வம் கொணர்வாய்!
சிங்காரத தமிழ்
ஏற்றுவாய்!
என்றிருந்தேன்!

ஏறினாய்! நீ !
ஏமாந்தது!
தமிழ்!

படத்தை போட்டாய் !
பாடத்தை மறந்தாய்!

ஆனந்த சுதந்தரம்
அடைந்தாய் என்றேன்!
ஏமாற்றமே !

ஆனந்தம்
இல்லை !
சுதந்தர ம்
இல்லை!
சந்தி சிரிக்க,
வைத்தாய் !

உழைக்கும் கூட்டம்
உயர்வில்லாது !
சுரண்டும் கூட்டம்,
சொர்க்கபுரி
அமைத்திட!

உலகமயமாக்கும்
ஊடுருவச் செய்தாய் !

ஊர் உயர,
உழவு உயர,
யாது செய்தாய்?

' நந்தியாய்,
சிங்கூராய்,
கலிங்கமாய்,
குர்கானாய்,'
'சிறப்பு' செய்தாய் !

ஏரின் பெருமயை
நீரில் கரைத்தாய்!
' நீண்ட பயணத்தை'
நிர்கதியாக்கினாய் !

'வேண்டினேன்
பராசக்தியை'
'மீண்டும் பிறந்திட,
வேர்களைக் காத்திட',

உதயமானேன்!
'ஏ.கே ௨007'
உடன்!

No comments: