தமிழா!
நம்பினேன்!
உருப்படுவாய் !
உரிமை காப்பாய் !
மொழி காப்பாய்!
வழி திறப்பாய்!
என்று!
விழித்திருந்து,
உறங்க வைத்தாய்!
உரிமை கிறங்க
வைத்தாய் !
'சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்பாய்'
என்று!
நீ !
சேத்துப்பட்டில்
வீதி சமைத்தாய் !
சோத்துப் பாட்டிற்கு
கையேந்தும் சோதனை!
தமிழ்நாடு!
சாதனை செய்ய
ஏன் மறந்தாய்?
திக்கெட்டும் செல்வாய்!
செல்வம் கொணர்வாய்!
சிங்காரத தமிழ்
ஏற்றுவாய்!
என்றிருந்தேன்!
ஏறினாய்! நீ !
ஏமாந்தது!
தமிழ்!
படத்தை போட்டாய் !
பாடத்தை மறந்தாய்!
ஆனந்த சுதந்தரம்
அடைந்தாய் என்றேன்!
ஏமாற்றமே !
ஆனந்தம்
இல்லை !
சுதந்தர ம்
இல்லை!
சந்தி சிரிக்க,
வைத்தாய் !
உழைக்கும் கூட்டம்
உயர்வில்லாது !
சுரண்டும் கூட்டம்,
சொர்க்கபுரி
அமைத்திட!
உலகமயமாக்கும்
ஊடுருவச் செய்தாய் !
ஊர் உயர,
உழவு உயர,
யாது செய்தாய்?
' நந்தியாய்,
சிங்கூராய்,
கலிங்கமாய்,
குர்கானாய்,'
'சிறப்பு' செய்தாய் !
ஏரின் பெருமயை
நீரில் கரைத்தாய்!
' நீண்ட பயணத்தை'
நிர்கதியாக்கினாய் !
'வேண்டினேன்
பராசக்தியை'
'மீண்டும் பிறந்திட,
வேர்களைக் காத்திட',
உதயமானேன்!
'ஏ.கே ௨007'
உடன்!
No comments:
Post a Comment