Friday, January 25, 2008

பித்தன்

கிழிந்த ஆடை!
கிழியாத உள்ளம்!
மெலிந்த உடல் !
மெலியாத எண்ணம் !
தெளிந்த செயல் !
தெளியாத மனம் !
அறியாத உலகம் !

Wednesday, January 23, 2008

வேகத் தடை

தடைகள் உடைபடும்
வீதிகளில்!
மேடும் சமமாகும்
மேதகு சவாரியில்!
மூன்றாம்
எழுச்சி ,
எமக்கு?

Sunday, January 20, 2008

காவல் துறை ஊழல்- 4

மும்பாய்: மரின் டிரைவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர், சுனில் மொரே, பதின் பருவ பெண்ணை, 21, ஏப்ரல், 2005ல், மேற்படி காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக, 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டார்.உருவாய் 26,500 அபராத தொகையாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


சண்டிகார்: போதை மருந்துகள் கடத்தும் கும்பலிடம் இலஞ்சம் வாங்கிய காவல்துறையினர் குறித்து , செய்தி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டதை தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தொடர்புடைய நான்கு காவலர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.இரு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த, பிரபல குற்ற வழக்குகள்,நமது நாட்டின் நீதித்துறை அமைப்பு பற்றியும், தொடரும் ஊழல் நிலைமை குறித்தும் பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

Saturday, January 19, 2008

காவல் துறை ஊழல்- 3

இனிவரும் பக்கங்களில் காவல் துறை ஊழல் தொடர்பான வழக்குகள் சிலவற்றை பார்ப்போம்:


மும்பாய்: 5 காவலர்கள் ராய்காட் பகுதியில் இருந்து மும்பாய்க்கு ஆயுதங்கள் கடத்த உதவியதின் காரணமாக, 1993ல் மும்பாய் 12 தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாயிருந்தார்கள். என இப் பயங்கரவாத செயலுக்கு, 7 இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளனர் 'தடா' வழக்கு மன்றம் என நிரூபித்தது


தில்லி: சராய் கலே கான் காவல் நிலையப் பொறுப்பு உதவி ஆய்வாளார், இலஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. காவலர்களால் கைது செய்யப்பட்டார். உருவாய் 20000 த்துடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது அலுவலக மேசையில் இருந்து உருவாய் 50000 மற்றும் 100 கிராம் போதை மருந்து கண்டுபிடுத்து எடுக்கப்பட்டது .மற்றொரு திருட்டு வழக்கில் பிணையல் அளிப்பதற்காக, உருவாய் 2 இலட்சம் இலஞ்சம் , கைது செய்யப்பட்டவரின் தாயாரிடம் காவல் உதவியாளர், கோரி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இலஞ்சத் தொகை, தவணை முறையில் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது.


உத்தரப்பிரதேசம்: 3 காவலர்கள் வழிப் போக்கரான கணவன் மனைவியை, 'பெரிய நொய்டா பகுதியில்' வழி மறித்து துன்புறுத்திய வழக்கில், சிறை தண்டனை அளிக்கப்பட்டனர். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 323ன் கீழ் காயம் ஏற்படுத்துதல், 354- குற்றம் ஏற்படுத்தி பெண் ஒருவரை மானபங்கப் படுத்த முயற்சி செய்வது, 504-அமைதியை குலைக்கும் நோக்கில் அவதூறு செய்வது, 506- அச்சுறுத்தல், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Thursday, January 17, 2008

காவல் துறை ஊழல்- 2

தமது நலன்களுக்காக அரசியல் தலைமை தவறான அதிகாரிகளை உயர்ந்த காவல் துறை பதவிகளில் அமர்த்தி காரியம் சாதித்துக் கொள்கிறது.பொதுவாக ஊழல் என்பது, இலஞ்சம் வாங்குவது,பண பரிவர்த்தனை அல்லது தப்பு செய்பவர்களுக்கும் காவல்துறை அகிகாரிகளுக்கும் இடையில் நிகழும் மதிப்பு மிக்க பொருள் கை மாறுவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது ஆகும்.


இதர குற்றங்கள் போலி மோதல் கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்,காவல் குற்றங்கள்,வதை செய்தல் தொடங்கி கள்ளத் தனமாக ஆயுதங்கள் பயன்படுதுவது முதலியனவாகும்.


அதிகப்படியான ஊதியம்,மேம்படுத்தப்பட்ட பயிற்சி, போன்ற ஊழலை போக்கும் வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தியும் ஊழல் ஒழிந்த பாடில்லை.உள்துறை அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 67% சத வீதத்திற்கு மேல் காவல் துறைக்கு செலவு செய்யப்பட்டாலும், அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நடத்தையியல் மற்றும் மனப்போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


இத்தொகை அல்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக காவல்துறை நவீன மயத்திற்காக உரு. 800 கோடிக்கு மேல் மாநிலங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் காவல் அணிகளில் எந்த மட்டத்திலும், நடத்தையியல் முன்னேற்றமும் அரிதாகவே உள்ளது.


ஒரு வகையில் காவல் துறை ஊழலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால்,அதன் செயல் மனித உரிமைகள் மீறலே ஆகும். தற்பாதுகாப்பு என்பது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. மேலும், காவல் பாதுகாப்புகள் அதிகரிப்பு, தவறான காவல் துறை வழக்குகள் என்பது அரசியல் சட்டம் பிரிவு 21ன் கீழ் உறுதி செய்துள்ள குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது ஆகவும் அமைகிறது.


போலி மோதல் குற்றங்கள் அதிகரிப்பு, அதிகரித்து வரும் சிறைச்சாலை மரணங்கள் தேவையற்ற, காலதாமதமாகும் புலனாய்வுகள்,குடிமக்களிடையே பாதுகாப்பற்ற சுழலையும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலையும் மிகவும் அதிகரித்து உள்ளது.


Tuesday, January 15, 2008

காவல் துறை ஊழல் - அர்சிரிகா சிங் -1

ஊழல் என்றால் என்ன?
காவல் அதிகாரத்தை தனிப் பட்ட அல்லது காவல் துறை அமைப்பின் நலனுக்கு அலுவல் ரீதியாக ஒரு காவல் துறை அதிகாரி பயன்படுத்தும் போக்கு, ஊழல் என்று வரையறை செய்து கொள்ளலாம். எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. பல சிக்கலான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு அம்சத்தில் அனைவருக்கும் புலப்படக் கூடியது, உலக நாடுகளின் பல பகுதிகளிலும் 'விரிவடைந்து சிறக்கிறது'.
எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக,

1.அக நிலையில் நடக்கும் ஊழல்
2.புற நிலையில் நடக்கும் ஊழல்

என பிரித்து ஆராயலாம்.

முதலாவதாக, காவல்துறையின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குள் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,அக நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

அடுத்து, காவல் துறையின் அதிகாரி ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பொதுமக்களிடம் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,புற நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

காவல்துறை ஊழலில் மிக முக்கிய கூறாக, அதிகார மீறல் அமைகிறது. தன் இலக்கிலிருந்து வழுவி குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக, ஊக்குவிக்கச் செய்கிறது. துறை நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கு நிலையிலும், ஊழல் மலிந்து திறமையான, வலிமையான செயல்பாட்டிற்கு தடையாக விளங்குகிறது.

முகாமையான காரணங்களில் ஒன்றாக, தொழில்சார்ந்த திறமையுடன் செயல்படாது , பெரும்பாலும் காவல்துறையினர் அரசியல்மயமாகி நிற்பது ஆகும். அரசியல்வாதிகளால் ஈர்க்கப்பட்டு, பலகீனமான, ஊழலில் திளைத்த அதிகாரிகள், ப தவி அமர்த்தம், மாற்றல் ஆகியவற்றிற்கு உடன் பட்டு, தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொது நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

- தமிழ் வடிவம் -

Monday, January 14, 2008

மோதல் சாவு கலாச்சாரம்- 4

துறை சார்ந்த குற்றங்கள், குறிப்பாக கோழைத்தனம், உத்தரவுளை மதிக்காத போக்கு, கீழ்ப்படியாமை ஆகியவைகள், குடி மக்கள் உரிமைகள் மீறப்படும் பெரிய குற்றங்களிலிருந்து வேறு படுத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மீதான கடுமையான புகார்கள் குறித்து, குறிப்பாக, மோதல் கொலைகள் தொடர்பாக, ஒரு சுயேச்சையான, காலக் கிரமத்திற்குள் விசாரணை நடத்தக் கூடிய, அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் உள்ள அமைப்பிடம், அளிக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 2006 ல், காவல்துறை சீர்திருத்தம் பற்றி உச்ச நீதி மன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், காவலர் மீது எழும் புகார்கள் குறித்து விசாரிக்கும் சுயேச்சையான அதிகார அமைப்பு அரசாங்கங்கள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.வெளிப்படையான நடைமுறையில் காவலர்கள் மீதான தீவிரமான புகார்களை விசாரித்திடக்கூடிய, 'காவலர் புகார்கள் விசாரணைக்குழு உறுப்பினர்களை' தேர்வு செய்து அமைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இவ் வழிகாட்டு முறைகள், நேர்மையான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால், 'வளர்ந்து வரும் மோதல் கொலை' கலாச்சார அலைப் பெருக்கத்தை கட்டுப்படுத்திட முடியும். தமது எட்டாவது அறிக்கையில், தேசிய காவல் ஆணையம்,"காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 132 மற்றும் 197ன் கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளது.


இயற்றப்படும் எந்த ஒரு புதிய காவல் சட்டத்தின் பிரிவுகளிலும், காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் போட முன் அனுமதி பெறுவது என்பது ,இடம் பெறக்கூடாது. விரைவான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இது பெருந்தடையாக உள்ளது. காவல்துறை நிகழ்த்தும் கொலைகள் தொடர்பாக வழங்கப்படும் வீரப்பதங்கங்கள், விரைவான பதவி உயர்வுகள் போன்ற கண்ணியமற்ற, இகழ்ச்சிக்குரிய நடைமுறை, நிறுத்தப்பட வேண்டும்.


எந்த ஒரு காவல்துறை நடவடிக்கையும்,சுயேச்சையான, நம்பகத்தன்மையுள்ள துறை விசாரணை செய்யப்பட்டு ,மோதல் கொலைகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட அதிகாரம், சட்ட ரீதியிலானாதா மற்றும் நியாயமானதா என்றால் ஒழிய அதனை பாராட்ட இயலாது.



இறுதியாக, சனநாயக அமைப்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துள்ளவாறு, மக்களின் வாழ்க்கை மற்றும் கண்ணியம் ஆகிய பண்புகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி உத்தரவு செய்ய வேண்டிய தலையாய பொறுப்புணர்ச்சி ,அரசியல் தலைமைக்கு உண்டு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

இவ்வாறு செய்வதின் வாயிலாக, விதிமுறைகளை சமமாக மதிக்கும் சமுதாயத்திற்கு, நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத விழுமியங்களை காக்கும் சமுதாயத்திற்கு, ஒரு பெரிய சேவை செய்வது போல் ஆகும்

Sunday, January 13, 2008

சுருங்கிய வாழ்க்கை!

ஒதுங்கினேன்
ஈரத்துடன்!
கொட்டும் மழையில்
கட்டிடம் அருகே!

கால் போன போக்கில்
கடந்தேன்!
கழனியில்லாமல் !
வாய்க்கால் வரப்பு காணாமல் !

நெல் வெளியும் புல் வெளியும்
சுருங்கியது!
சுவடில்லாமல்!

கவடு மாந்தர் கவர்ந்தனர்!
'காலனிகள்' எழுப்பி
எம்மை மறந்தனர்!

தீவனந்தேடி தினந்தோறும்
அலையும்
கோவண வாழ்க்கை!

சுற்று வழி விலகி -2

நன்கு அறிந்த எம் இல்
படுக்கை அறை
கதவு மூடல்
அனுபவ அறிவை
உறுதிப்படுத்தும்.
மூடிய விழிகளில் சந்தேகம்
வெள்ளமென மீளும்,

படுக்கையில் முகம் பதிய
வீழ்ந்து,
படுக்கை அறையில்
மெல்ல நிகழ்ந்திடும்
தலை கீழ் மாற்றம்.

அவன் குரல்,
சினந்த சொற்கள்
மீண்டும் மீண்டும்
என்னை நிந்திக்கிறது.

கூரையில் தெளித்திடும்
மென் மழைத்துளிகள்
கூடிக் கரைந்திடும்
குருவியின் கீதம்.

வெளி விளக்கொன்று
அணைகிறது
மரக்கிளை நிழல்
திட்டு திட்டாக:
திரைச் சீலையில்,
சுவர்களில்
மேற் கூரையில்
மீண்டும் மெல்ல
ஒரு தலை கீழ் மாற்றம்,

அடுத்து:
விசையுடன் வீசும்
காற்று
ஒவ்வொரு முறையும்
தம் பதிவை
பலகணியில் பதித்து
செல்லும்

நினைவுகள்
எம் நனவு நிலையைத்
தட்டி எழுப்பும்
இளமையின் விருப்பு
வெறுப்பற்ற நிலையும்
கற்றலில் கிளர்ச்சியும்,
ஒரு காலத்தில்
கை அளவு அறிவுக்கு
பசியுடன்
ஒருவருக்கொருவர்
அங்கீகாரம் தேடி

அடங்கா வேட்கை
காரின் கதவு
இரைச்சலுடன்
மூடல்,
விசையுடன் கணத்த
காலடி
ஓசைகள் கடக்கின்றன
தாழ்வாரம் கடந்து
மங்கிய ஒளியில்.

பளிச்சிடும் மஞ்சள் ஒளியின்
வெள்ளிக்கீற்று
அடுத்த அறையின்
கதவின் கீழ் வழி
நுழைகிறது
இது போழ்து
உறங்குவது போல் பாசாங்கு
என்னால் செய்ய இயலுமா?
சூடான அவர் சொற்கள்
மறப்பேனா நான்?
மறப்பேனா நான்?

அவரின் உடல் எடை
நெருங்குகிறது
கத கதப்பு அளித்து
படுக்கையில்

- மொழி பெயர்ப்பு

Saturday, January 12, 2008

சுற்று வழி விலகி -1

இலையுதிர் காலம்.
குறுகிடும் பொழுதுகள்
கோடையின் நீட்டிப்பை
குறிப்புணர்த்தும்,

நினைவூட்டல்.
எவையும் எப்போதும்
கடந்து விடவில்லை
உண்மையில்,
நாம் எண்ணுவதைப் போல்.

நம் காலத்து உறவு
நிறைவானதாக முதிர்ச்சியானதாக
அமைந்திட வேண்டும்.

முரட்டு அன்பும்
ஆழ்ந்த உடன்பாட்டின்மையும்
நாம் பட்டறிவது
நமக்கு தேவையில்லை.

நிறமற்ற விழு ஞாயிறு
மலைப் பகுதியில்,
மேலும் குளிர்ந்து சய்ந்திடும்
மாலைப் பொழுதில்.

சேனிசு போசுடாக்-
- ஆசுத்திரேலியா- மொழி பெயர்ப்பு