Sunday, January 13, 2008

சுற்று வழி விலகி -2

நன்கு அறிந்த எம் இல்
படுக்கை அறை
கதவு மூடல்
அனுபவ அறிவை
உறுதிப்படுத்தும்.
மூடிய விழிகளில் சந்தேகம்
வெள்ளமென மீளும்,

படுக்கையில் முகம் பதிய
வீழ்ந்து,
படுக்கை அறையில்
மெல்ல நிகழ்ந்திடும்
தலை கீழ் மாற்றம்.

அவன் குரல்,
சினந்த சொற்கள்
மீண்டும் மீண்டும்
என்னை நிந்திக்கிறது.

கூரையில் தெளித்திடும்
மென் மழைத்துளிகள்
கூடிக் கரைந்திடும்
குருவியின் கீதம்.

வெளி விளக்கொன்று
அணைகிறது
மரக்கிளை நிழல்
திட்டு திட்டாக:
திரைச் சீலையில்,
சுவர்களில்
மேற் கூரையில்
மீண்டும் மெல்ல
ஒரு தலை கீழ் மாற்றம்,

அடுத்து:
விசையுடன் வீசும்
காற்று
ஒவ்வொரு முறையும்
தம் பதிவை
பலகணியில் பதித்து
செல்லும்

நினைவுகள்
எம் நனவு நிலையைத்
தட்டி எழுப்பும்
இளமையின் விருப்பு
வெறுப்பற்ற நிலையும்
கற்றலில் கிளர்ச்சியும்,
ஒரு காலத்தில்
கை அளவு அறிவுக்கு
பசியுடன்
ஒருவருக்கொருவர்
அங்கீகாரம் தேடி

அடங்கா வேட்கை
காரின் கதவு
இரைச்சலுடன்
மூடல்,
விசையுடன் கணத்த
காலடி
ஓசைகள் கடக்கின்றன
தாழ்வாரம் கடந்து
மங்கிய ஒளியில்.

பளிச்சிடும் மஞ்சள் ஒளியின்
வெள்ளிக்கீற்று
அடுத்த அறையின்
கதவின் கீழ் வழி
நுழைகிறது
இது போழ்து
உறங்குவது போல் பாசாங்கு
என்னால் செய்ய இயலுமா?
சூடான அவர் சொற்கள்
மறப்பேனா நான்?
மறப்பேனா நான்?

அவரின் உடல் எடை
நெருங்குகிறது
கத கதப்பு அளித்து
படுக்கையில்

- மொழி பெயர்ப்பு

No comments: