Saturday, January 19, 2008

காவல் துறை ஊழல்- 3

இனிவரும் பக்கங்களில் காவல் துறை ஊழல் தொடர்பான வழக்குகள் சிலவற்றை பார்ப்போம்:


மும்பாய்: 5 காவலர்கள் ராய்காட் பகுதியில் இருந்து மும்பாய்க்கு ஆயுதங்கள் கடத்த உதவியதின் காரணமாக, 1993ல் மும்பாய் 12 தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாயிருந்தார்கள். என இப் பயங்கரவாத செயலுக்கு, 7 இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளனர் 'தடா' வழக்கு மன்றம் என நிரூபித்தது


தில்லி: சராய் கலே கான் காவல் நிலையப் பொறுப்பு உதவி ஆய்வாளார், இலஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. காவலர்களால் கைது செய்யப்பட்டார். உருவாய் 20000 த்துடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது அலுவலக மேசையில் இருந்து உருவாய் 50000 மற்றும் 100 கிராம் போதை மருந்து கண்டுபிடுத்து எடுக்கப்பட்டது .மற்றொரு திருட்டு வழக்கில் பிணையல் அளிப்பதற்காக, உருவாய் 2 இலட்சம் இலஞ்சம் , கைது செய்யப்பட்டவரின் தாயாரிடம் காவல் உதவியாளர், கோரி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இலஞ்சத் தொகை, தவணை முறையில் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது.


உத்தரப்பிரதேசம்: 3 காவலர்கள் வழிப் போக்கரான கணவன் மனைவியை, 'பெரிய நொய்டா பகுதியில்' வழி மறித்து துன்புறுத்திய வழக்கில், சிறை தண்டனை அளிக்கப்பட்டனர். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 323ன் கீழ் காயம் ஏற்படுத்துதல், 354- குற்றம் ஏற்படுத்தி பெண் ஒருவரை மானபங்கப் படுத்த முயற்சி செய்வது, 504-அமைதியை குலைக்கும் நோக்கில் அவதூறு செய்வது, 506- அச்சுறுத்தல், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments: