Monday, January 14, 2008

மோதல் சாவு கலாச்சாரம்- 4

துறை சார்ந்த குற்றங்கள், குறிப்பாக கோழைத்தனம், உத்தரவுளை மதிக்காத போக்கு, கீழ்ப்படியாமை ஆகியவைகள், குடி மக்கள் உரிமைகள் மீறப்படும் பெரிய குற்றங்களிலிருந்து வேறு படுத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மீதான கடுமையான புகார்கள் குறித்து, குறிப்பாக, மோதல் கொலைகள் தொடர்பாக, ஒரு சுயேச்சையான, காலக் கிரமத்திற்குள் விசாரணை நடத்தக் கூடிய, அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் உள்ள அமைப்பிடம், அளிக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 2006 ல், காவல்துறை சீர்திருத்தம் பற்றி உச்ச நீதி மன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், காவலர் மீது எழும் புகார்கள் குறித்து விசாரிக்கும் சுயேச்சையான அதிகார அமைப்பு அரசாங்கங்கள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.வெளிப்படையான நடைமுறையில் காவலர்கள் மீதான தீவிரமான புகார்களை விசாரித்திடக்கூடிய, 'காவலர் புகார்கள் விசாரணைக்குழு உறுப்பினர்களை' தேர்வு செய்து அமைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இவ் வழிகாட்டு முறைகள், நேர்மையான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால், 'வளர்ந்து வரும் மோதல் கொலை' கலாச்சார அலைப் பெருக்கத்தை கட்டுப்படுத்திட முடியும். தமது எட்டாவது அறிக்கையில், தேசிய காவல் ஆணையம்,"காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 132 மற்றும் 197ன் கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளது.


இயற்றப்படும் எந்த ஒரு புதிய காவல் சட்டத்தின் பிரிவுகளிலும், காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் போட முன் அனுமதி பெறுவது என்பது ,இடம் பெறக்கூடாது. விரைவான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இது பெருந்தடையாக உள்ளது. காவல்துறை நிகழ்த்தும் கொலைகள் தொடர்பாக வழங்கப்படும் வீரப்பதங்கங்கள், விரைவான பதவி உயர்வுகள் போன்ற கண்ணியமற்ற, இகழ்ச்சிக்குரிய நடைமுறை, நிறுத்தப்பட வேண்டும்.


எந்த ஒரு காவல்துறை நடவடிக்கையும்,சுயேச்சையான, நம்பகத்தன்மையுள்ள துறை விசாரணை செய்யப்பட்டு ,மோதல் கொலைகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட அதிகாரம், சட்ட ரீதியிலானாதா மற்றும் நியாயமானதா என்றால் ஒழிய அதனை பாராட்ட இயலாது.



இறுதியாக, சனநாயக அமைப்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துள்ளவாறு, மக்களின் வாழ்க்கை மற்றும் கண்ணியம் ஆகிய பண்புகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி உத்தரவு செய்ய வேண்டிய தலையாய பொறுப்புணர்ச்சி ,அரசியல் தலைமைக்கு உண்டு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

இவ்வாறு செய்வதின் வாயிலாக, விதிமுறைகளை சமமாக மதிக்கும் சமுதாயத்திற்கு, நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத விழுமியங்களை காக்கும் சமுதாயத்திற்கு, ஒரு பெரிய சேவை செய்வது போல் ஆகும்

No comments: