ஒதுங்கினேன்
ஈரத்துடன்!
கொட்டும் மழையில்
கட்டிடம் அருகே!
கால் போன போக்கில்
கடந்தேன்!
கழனியில்லாமல் !
வாய்க்கால் வரப்பு காணாமல் !
நெல் வெளியும் புல் வெளியும்
சுருங்கியது!
சுவடில்லாமல்!
கவடு மாந்தர் கவர்ந்தனர்!
'காலனிகள்' எழுப்பி
எம்மை மறந்தனர்!
தீவனந்தேடி தினந்தோறும்
அலையும்
கோவண வாழ்க்கை!
No comments:
Post a Comment