Sunday, January 13, 2008

சுருங்கிய வாழ்க்கை!

ஒதுங்கினேன்
ஈரத்துடன்!
கொட்டும் மழையில்
கட்டிடம் அருகே!

கால் போன போக்கில்
கடந்தேன்!
கழனியில்லாமல் !
வாய்க்கால் வரப்பு காணாமல் !

நெல் வெளியும் புல் வெளியும்
சுருங்கியது!
சுவடில்லாமல்!

கவடு மாந்தர் கவர்ந்தனர்!
'காலனிகள்' எழுப்பி
எம்மை மறந்தனர்!

தீவனந்தேடி தினந்தோறும்
அலையும்
கோவண வாழ்க்கை!

No comments: