Friday, February 8, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை: தொடர்ச்சி

மூர்க்கத்தனமான கொலை பாதக செயல் அரங்கேறிய போது 4, 5 மணி நேரத்திற்கு, மாநிலத்தின் அரசியல் நிர்வாக அதிகார மையத்தின் பகுதியான கவுகாத்தியில், அரசாங்கத்தின் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க அளவில் வருகையில் இல்லை.

மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கொடூரமான 'கொலை பாதகச் சடங்கு' மலைவாழ் மக்கள் மீது நிறைவேற இடமளித்தது.வாக்கு வாங்கி அரசியலின் மிக மோசமான நிகழ்வாக இது அமைந்தது.

கோரிக்கை ஊர்வலம் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் ஏதும் இன்றி சென்றதாகவும், உறுப்பினர்கள் சிலரால் நிகழ்ந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அரசாங்கம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறைக்கு துணை போனது பின்வருமாறு :

1. மலைவாழ் மக்கள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டது அரசங்கத்தால் மறுக்கப்பட்டது.

2. கூட்டம் நடத்தும் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை

3. ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, காவல்துறை அதனை கட்டுப்படுத்த, அனுப்பி வைக்கப்படவில்லை.

4. பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையை குறைத்து காண்பித்து, வன்முறையாளர்களை அரசாங்கம் காப்பாற்றியது.

5. காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட, சரியான மருத்துவம் செய்திடாமல், அவர்களை மருதுவமனைகளில் இருந்து வெளியேற்றியது.

6. ஆரம்பத்தில் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.சி.பி.ஐ விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.அதிக எண்ணிக்கையிலான வழக்குகள், ஆர்ப்பாட்டக்காரர்களான, மலைவாழ் மக்கள் மீது மட்டும் போடப்பட்டது. உள்ளூர்வாசிகள் மீது குறைவான வழக்குகளே போடப்பட்டன.

No comments: