Wednesday, February 13, 2008

"யானையைக் காப்போம்"

எலிகளாய் இருந்திருந்தால்
வலைகளில் தங்கியிருப்போம்!
நாய்களாய் இருந்திருந்தால்
தெருக்களில் திரிந்திருப்போம் !
பருக்கைகள் கிடைத்திருக்கும் !

எச்ச உணவு நிலைத்திருக்கும்
வாழ்க்கை ஓடியிருக்கும் !
கோவிலில் இருந்திருந்தால்
கோரம் நிகழ்ந்திருக்காது !

இயற்கையை நேசித்தோம் !
சூழலை சுவாசித்தோம் !
எம் இருப்பிடம்
எம்மை விட்டு
நீங்கியது !
தண்ணீரும் இல்லை!
உணவும் இல்லை !

தேடித் திரிந்தோம்!
விரட்டி அடித்தார்!
வேறு கதியில்லை!
குழவியைச் சுமந்தேன்!

சூழ்ந்த கதி!
தொடர்ந்த வாழ்க்கையை!
முற்றுப் புள்ளி வைத்தது !
தொடர் வண்டி!

எம்மைச் சிதைத்தது கூட
எமக்கு வலியில்லை!
எம் சந்ததியை,
கருவறையிலிருந்து
பிய்த்து எடுத்து ,
எம் கண் முன்னே ,
வெடித்து சிதைத்த,
உம் வெறி!
வெடிகுண்டும் தோற்கும்!

No comments: