Saturday, March 22, 2008

சிறைக் கைதிகள்

மனித உரிமை மீறல்

சிறைக் கைதிகள் இந்தியர் ஆனாலும், பாக்கிசுத்தானியர் ஆனாலும் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் வாடுவது, இறப்பது என்பது வெகு காலமாக வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் கொடுமை ஆகும்.சில காலமாக, அதுவும் இந்திய மனித உரிமைக் குழுக்கள், பாக்கிசுத்தான் மனித உரிமைக் குழுக்கள், இரு நாட்டு நண்பர்கள் கழகம் ஆகியவைகள் முன் முயற்சியில் குறிப்பாக, அசுமா சகாங்கீர் போன்ற, உலக நாடுகள் அறியப்பட்ட பாக்கிசுத்தான் மனித உரிமைப் போராளி ஆகியோரின் தொடர் அணுகு முறையினால் பலர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆயினும் இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய அடிகள் ஏராளம்.அங்கொன்றும் இங்கொன்றும் ஆக விடுவிக்கப்படும் கைதிகள் போக, அரச தந்திர மட்டத்தில் அக்கறையாக அமர்ந்து பேசி, கைதிகள், மீனவர்கள் ஆக இருந்தாலும் , எல்லை தாண்டி சென்றவர்கள் ஆக இருந்தாலும் கால க் கிரமத்தில், படை வீரர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே விடுதலை செய்யப்பட வேண்டும்

மனம் குழம்பிய நிலையில் சிறைகளில் வாடும் நோயாளிகள் சம்பந்தமாக மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகம் உண்டு.

No comments: