Thursday, May 8, 2008

ஆழமானது!

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது!
செர்மன் இணைந்தது!
உத்தபுரம் தடுப்பு சுவர்
இடிக்கப்பட்டது!
பிரிவினை ஆழமானது!

சுவர்களை விட
மனத் திரைகள்!
வள்ளலார் நீக்கச் சொன்னது!
அழுக்கேறியுள்ளது!

மனச் சிறைகளிலிருந்து
விடுபடுவோம்!
சிறார்களையாவது
காப்போம்!

சாதியத் தீயை
சந்ததிகளுக்கு
இனிமேலும்!
உரிமையாய் அளிக்கமாட்டோம்!
தமிழன் எனும் அடையாளம்
உறுதி செய்வோம்!

No comments: