Wednesday, July 9, 2008

அமெரிக்காவின் தேவை: உண்மை அறியும் ஆணையம்!

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர்,
அமெரிக்காவும் போர் குற்றங்கள் புரிந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் என்று குற்றம் சுமத்திய போதுதான் நமக்கு ந‌ன்கு தெரிய வந்தது, நமது நாட்டிற்கு தேவை, நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஒரு புதிய வழி என்பது.

"தற்போதைய அமெரிக்க நிர்வாகம், போர்க் குற்றங்கள் ஏதும் புரியவில்லை எனும் சந்தேகம் நமக்கு எழவேண்டிய அவசியமே இல்லை"

அமெரிக்க மீறல்கள் குறித்து ஈராக்கில் விசாரணை நடத்திய அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரி, அந்தோணீயோ தகூபா, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் எனும் அமைப்பின் செய்தி அறிக்கையில், அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய வதை குறித்து,
"வதை செய்யுங்கள் என உத்தரவிட்டவர்கள் மீது, எவ்விதமான நடவடிக்கை எடுத்திட முடியும் என்பதே தற்போது எழும் கேள்வியாகும்"

பொறுப்பேற்பு உணர்ச்சியின் முதல் கட்டம் வழக்குகள் தொடுப்பது என்பதல்ல.ஆன்ம தேடல் வழி, ஒரு தேசிய தூய்மைப்படுத்துதல் பணிக்குத் தலைமை ஏற்றிடும் வாய்ப்பு உள்ள, ஒரு தேசிய உண்மை அறியும் ஆணையம் அமைத்திடுதல் நமக்கு இன்றியமையாத தேவையாகும்.

இதுதான் தென்னாப்பிரிக்க அரசாங்கம் நிறவெறிக் கொள்கைக்குப் பின் உண்மை அறிதல் மற்றும் இணக்க உணர்வு ஆணையம் அமைத்து செயல்பட்ட விதம் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க நாடும் இனவெறித் தொடர்பாக கெர்னர் ஆணையம் அமைத்து செயல்பட்டது. 1980ல் அமைக்கப்பட்ட ஆணையமும், இரண்டாம் உலகப்போரில் சிறை வைக்கப்பட்ட சப்பானிய அமெரிக்கர்கள் குறித்து ஆராய்ந்தது.

தற்போது, செப்டம்பர் 11 நிகழ்விற்கு பிறகு, நிகழ்ந்தேறிய மீறல்கள் குறித்து புலனாய்வு செய்திட, இதேபோன்ற ஒரு உண்மை அறியும் ஆணையம் அமைத்திட வேண்டிய தேவை உள்ளது.

நம‌க்கு முன்பே தெரியும் ஐக்கிய அமெரிக்க நாடு,நெல்சன் மண்டேலாவை கண்காணிக்கப் படுபவர்கள் பட்டியலில் வைத்திருந்தது. சீன‌ இராணுவ‌ம், கொரியப் போரில் அமெரிக்க‌ கைதிகள் மன உறுதியை குலைப்பதற்கு, பயன்படுத்திய புலனாய்வு உத்திகளை பதிவேடுகள் வழி அறிந்து, அமெரிக்க இராணுவமும் பயன்படுத்தி்யது என்றும் அறிய வருகிறது.

எனினும், இப்படிப்பட்ட வதை உத்திகள் மூலம் பொய்யான வாக்குமூலங்கள்தான் பெற முடிந்தது ,என நாம் அறிந்த செய்தியாகும்.

No comments: