Wednesday, July 16, 2008

"தேவை உண்மை அறியும் ஆணையம்" (மொழி பெயர்ப்பு) தொடர்ச்சி....

100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் ஆப்கானிசுத்தான், ஈராக் மற்றும் கெளந்த்தானமோ(கியூபாவிற்கு அருகில் உள்ள சிறை கொட்டடி) போன்ற பகுதிகளில்,அமெரிக்க காவலில் கொல்லப்பட்டனர் என்பது ந‌மது நாட்டின் புகழுக்கு,களங்கம் சேர்க்கக் கூடிய நிகழ்வுகள் ஆகும்.

நம்மால் வதைக்கு ஆளானவர்கள்,பெரும்பாலும் யாதும் அறியா அப்பாவிகள்.தார்மீக நெறி இழந்த,திறமையற்ற நிர்வாகத்திற்கு இச் செயல்கள் அழுத்தமான‌ சான்றாகும் என்பதே உண்மையாகும். 'மெக்கிலாட்சி' செய்தி இதழ் நிறுவன குழுமம் வெளியிட்டுள்ள, வதை மற்றும் இதர மீறல்கள் குறித்த,மிக மோசமான தொடர்களில், தாமசு ஒயிட் எனும் முன்னாள் இராணுவத்துறை செயலர் கூறியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், கெளந்த்தானமோ சிறை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே,அதில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினர், குற்ற நடவடிக்கைக்கு ஏதும் தொடர்பு இல்லாத‌வர்கள் ஆகும், என்பதாகும்.

மேலும், முகம்மது அக்தியார் என்கின்ற சிறைவாசி, அமெரிக்காவிற்கு சார்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.எனினும், அமெரிக்க இராணுவத்தினர் அவரை மிகவும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மீறல்கள்,செப்டம்பர்,11க்கு பிறகு,பல ஆண்டுகளாக தொடர்ந்தன.காரணம், பெரும்பான்மையான நமது தேசிய நிறுவனங்கள் தங்களது கட‌மையை சரிவர ஆற்றவில்லை என்பதே பகுதி உண்மையாகும்.

சனநாயகக் கட்சி நாட்களை கடத்தியது, விசுவாசமான எதிர்க் கட்சியாக த‌மது கடமையை ஆற்றவில்லை. ஊடகத்துறையில் உள்ள நாங்களும் கட்டுப்பட்ட நாயாகத்தான் இருந்தோம், மாறாக காவல் நாயாக செயல்படவில்லை.நாட்டை, இது போன்ற சூழலில் கைவிட்டு விட்டோம் என்பதே உண்மையாகும்.

இருப்பினும்,சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிவில் உரிமைக் குழுக்களும், வழக்குரைஞர்களும் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டனர்.ஆயினும் சில நீதிபதிகள் நிலைமைகளை அமைதியாக சலனமின்றி கவனித்து வந்தனர். நிர்வாகத்தின் உள்ளே சில பழமைவாதிகள் வெளிப்படையாகப் பேசினர்.

டைம்சு இதழ் எரிக் லிசட்பிலா,"புஷ்ஷின் சட்டங்கள்" எனும் தனது அருமையான நூலில்,"வெளிநாட்டினர் மற்றும் குடியுரிமைச் சேவை ஆணையர்",சேம்சு சிக்லர், அரேபிய‍‍‍‍ அமெரிக்க அண்டை அயலவரை, வீடு வீடாக சென்று சோதனையிட வேண்டும் எனும் திட்டத்திலிருந்து பின் வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.இப் புத்தகத்தில், ஒரு கட்டத்தில்,"நம்மிடத்தில் நமக்கென்று அளிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது" என்பதைச் சுட்டி, வீடு வீடான சோதனை முறை சட்ட விரோதம் என்று குறிப்பால் உணர்த்தினார்.

நான் மிகவும் போற்றக்கூடிய நிலையில், இராணுவ வழக்குரைஞர்கள் உள்ளனர்.தங்கள் பதவிக்கு ஆபத்து என்கின்ற போதிலும், பெண்டகன் இராணுவத் தலைமையை மறுத்து செயல்பட்டனர்.இதன் காரணமாக, குடிப் பழக்கம் உள்ள தங்கள் நண்பர்களையும் பகைத்துக் கொண்டனர்.பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இசுலாமியர்களுக்காக, இவர்களுக்கு எதிராக சான்றுகள் பெரும்பாலும் தெளிவில்லாமல் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்காக பரிந்து பேசியவர்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளில் புலனாய்வு செய்திடும் உண்மை அறியும் ஆணையம் என்பது, பாரபட்சமற்ற,மதிப்பு மிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர் பதவிகளில் உள்ள, இராணுவப் படைப்பிரிவுத் தலைவர்கள்,உயர் நிலையில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டதாக அமைந்திட வேண்டும். இதுபோன்ற பின்னணி உடையவர்களின் கண்டறிதல் அறிக்கை,அரசியலில் அரங்கில் மிகுந்த நம்பகத் தன்மையை நமக்கு ஏற்படுத்தும்.

நான் அறிந்த இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றெந்தப் பிரிவினரைப் போலவும்,நமது மீறல்கள் குறித்து அதிர்ச்சி அடைந்தவர்களாக உள்ளனர்.

No comments: