Thursday, October 30, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 3

மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக கழக அமைப்பின் தோற்றத்திற்கு காராணமான, லோக் தளம், காங்கிரசு(பழையது), சன சங் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை மத்திய சனதா அரசாங்கத்தில் சேர்ந்த காரணத்தினாலும்; மாநில அரசுகளில் பங்கு கொண்டதினாலும்; மேற்கு வங்க இடதுசாரி அரசில் இடம் பெற்றதாலும், அமைப்பு செயல்படாத நிலையிலேயே இருந்தது.

இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சனதாக் கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இடம் பெற்ற சூழலில், புதிய மத்திய அரசாங்கம் சிவில் உரிமைகளை ஒடுக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாக, தார்குண்டே, குல்தீப் நய்யார், ரசனி கோத்தாரி மற்றும் கிருசண காந்த் ஆகியோர், அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டினர்.

இதற்கிடையில், சிவில் உரிமைக் கழகத்தை இந்திய கம்யூனிசுடு( மார்க்சிசுடு-லெனினிசுடு) கட்சியினர் நடத்தி வந்தனர். இது குறித்து தார்குண்டே அவர்கள் ஒவ்வாமை கொள்ளவில்லை. மாறாக, 1973 மற்றும் 1977ல், அவர்கள் மீது ஆந்திர வெங்கல் ராவ் அரசாங்கம் நிகழ்த்திய அடக்குமுறைகள் பற்றி உண்மை அறியும் ஆய்வுக் குழுவை அமைத்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

என்றாலும், அரசியல் கட்சிகள், புதிய சிவில் உரிமை அமைப்பினை கைப்பற்றிக் கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை ஒரு விதியாக உருவாக்கினார். அப்போது தான், மக்கள் சிவில் உரிமைக் கழகம் உருவாகியது.

இச்சமயத்தில், புகழ் பெற்ற வழக்குரைஞர் கோவிந்த் முகோத்தி அவர்கள், மக்கள் சனநாயக உரிமைக் கழகம் என்னும் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்.

No comments: