Monday, October 27, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்!

சுரேந்திர மோகன் -மொழியாக்கம், பகுதி- 1

நான் டி.ஏ.வி. கல்லூரி மாணவராக இருந்தபோது, 1950ல் எனக்கு தார்குண்டேவைத் தெரியும். எம்.என்.ராய் அவர்களை அடிக்கடி சந்திக்க
அல்லது மனிதநேய அடிப்படைக் கட்சியின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வரும்போது அவரை எனக்குத் தெரியும்.

இக் குழுவின் சிறந்த தலைவர்களில் போராசிரியர்.பரேக் அவர்களும் அடங்குவர்.சமசவாடி இளைஞர் அவையினருடன் சேர்ந்து கம்யூனிசுடுகள் மற்றும் சன சங் காரர்களின் கொள்கைகளை எதிர்த்து பொதுச்சொற்பொழிவு நிகழ்த்த அவர்களை அழைப்பது வழக்கம்.

சமதர்மவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லாத தலைப்புகளான, கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் பெருவது அகியவை இந் நிகழ்ச்சியில் அடங்கும்.

1956, 1957 ஆம் ஆண்டுகளில் முசோரியில் நடந்த கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டபோதும் அவரை சந்தித்து இருக்கிறேன்.பேராசிரியர் பரேக் அவர்களுக்கும், மீரட் பேராசிரியர் ஆர்.எசு.யாதவ் அவர்களுக்கும் இடையில் கட்சி சார்பற்ற அரசியல் குறித்து கடுமையான வாதங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, பேராசிரியர் யாதவ் அவர்கள், மனித நேய அடிப்படைக் கட்சி அமைப்பதில் உறுதியாய் இருந்தார். இது குறித்து, எனக்கும் தார்குண்டே அவர்களுக்கும் இடையில், தீர்க்கப்படாத சிக்கல் , அவர் இறக்கும் வரையிலும் நட்பு முரண் ஆக நீடித்தது.

No comments: