தனித் தனியே
அணி அமைத்து
தவிக்காதே
தமிழா!
தரணி சுட்டும்!
அவலத்தைக் கொட்டி
குவிக்காதே!
தமிழா!
'ஒன்றே செய்'
'இன்றே செய்'
உன் பகை!
உள் பகை!
உணர்ந்த
செய்கை!
ஒழிப்பாய்!
இன மானம் காக்க
ஒன்றிணைவாய்!
உன் சுகம்,
போகம் மறந்து!
உன் தோழன்
உரிமைக்கு!
ஒரே குரலாய்
முழங்குவாய்!
ஓராயிரம் ஆண்டுகள் !
இழிவைத்
துடைப்பாய்!
No comments:
Post a Comment