Sunday, November 2, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 4

அக்டோபர், 1980ல், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பு மாநாடு, புதுதில்லியில் நடைபெற்றது. மேற்குவங்கத்தை ஆண்டு வந்த இடதுசாரி அரசு, மாநில அமைப்பின் பொறுப்பு, தங்கள் வசம் இருக்க வேண்டும் என கோரினர். இக் கோரிக்கையை எந்த சிவில் உரிமைக் குழுவும் ஏற்க இயலாதது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் சுயேச்சையாக செயல்பட முடியாது.

இதற்கிடையில், சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுத்தான் நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்ரமிப்பை எதிர்த்து, தார்குண்டே அவர்கள் தலைமையில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மார்க்சிசுடு கட்சியினர் மத்தியில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.

இப் பிரச்சினையை தீர்த்திட சமதர்ம கட்சியின் மூத்த தலைவர் மதுலிமாய் அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர்கள் மற்றும் மார்க்சிசுடு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும், மார்க்சிசுடு கட்சியினர் சனநாநாயக மற்ற நிலையில் இருந்து வளைந்து கொடுக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிற மாநிலங்கள் ஆன மகாராட்டிரம், பஞ்சாப் அகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தில் உள்ளது போல், இதர சிவில் உரிமை அமைப்புகள் செயல்பட்டு வந்தன. தார்குண்டே அவர்களின் முடிவின்படி, இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அவரின் முடிவின்படி, நான், சனதாக் கட்சியில் செயல்பட்டு வந்த டாக்டர்.ஒய்.பி.சிப்பர் அவர்களை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வேலையை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.

அவர், அமைப்பின் நிர்வாக செயலாளராக தமது இல்லத்தில் அமைந்துள்ள அலுவகத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். 1985ல், சபல்பூரில் நடைபெற்ற மாநாட்டில், அவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக, பேராசிரியர்.திலீப் சாமியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: