Friday, November 21, 2008

உலகுக்கு வழி காட்டும்!

வல்லரசு ஆக வேண்டும்!
படை பலம் கூட வேண்டும்!
கருவி பல வாங்க வேண்டும்!
காசு பணம் சேர்க்க வேண்டும்!

வாங்கிய ஆயுதம்
தூங்கியே இருக்கலாமா?
சாங்கியத்துக்கு பாவிக்க
வேண்டாமா?

உள் நாட்டில் வேலை
அதிகம் இல்லை!
அண்டை
அடுக்களைக்கு அனுப்பி
வைக்கலாமா!

சோதனை முயற்சி!
சாதனை கூட்டலாமா!
வெளி நாட்டு
வேதனை தீர்க்கலாமா?

சீவ காருண்யம் பேசும்
' சிவகாசி'
'சிந்து நதி'
நாகரீகம்
'ஆசிய சோதி'

உலகுக்கு வழி
காட்டும்!
தமிழா!
உனக்கு?

No comments: