Sunday, December 21, 2008

இரவு

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
விழு ஞாயிறும் தகிக்கவில்லை:
பனித்துளி தவிர எவையும் மின்னவில்லை
நீ அறிந்த என் முகம் தவிர எவையும் வெளிச்சம் இல்லை.

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
நெடுஞ்சாலையில் எவையும் தென்படவில்லை,
ஆற்றை தவிர எவையும் ஏக்கம் தீர்க்கவில்லை,
எவையும் இல்லை என்னைத் தவிர.

சமவெளியாவும் பனி மூடியுள்ளது,
வான் நீல மூச்சு சலனமற்று.
உலக இயக்கம் ஒரு கைக்குள் அடங்கி
அமைதி அதன் விழைவை ஆள்கிறது.

என் இசை, குழந்தையை மட்டும்
உறங்க வைக்கவில்லை,
உலகம் முழுவதும்
தூளியின் தாலாட்டில்,
உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது.

கப்பிரியேலா மிச்ட்ரல்- மொழி பெயர்ப்பு- 2

No comments: