Thursday, December 25, 2008

கண்டறிந்தேன்

சிற்றூர்ப் பயணத்தில்
இக் குழவியை
ஆழ்ந்த உறக்கத்தில் கண்டறிந்தேன்
சிறுமணி கிளைகளுக்கிடையில்.....

கொடிமுந்திரி தோட்டத்தின்
ஊடே கிளைகளின் தேடலில்
அவன் கன்னம் தென்பட்டது.

ஆழ் துயிலில் அஞ்சுகிறேன்,
அவன் கொடிமுந்திரி தோட்டத்தில்
கவிந்துள்ள மூடு பனி போல்
கரைந்திடக்கூடும்...

(கப்பிரியேல் மிச்ட்ரல் கவிதை- 4
மொழிபெயர்ப்பு)

No comments: