கப்பிரியேலா மிச்ட்ரல்-நோபல் பரிசு பெற்ற இலத்தின் அமெரிக்க கவிஞர்
கண்ணுறங்கு என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இரவின் தாரகை
தாலாட்டில்.
விழித்தெழு பகல்
பொழுதை உள்வாங்கு,
மகிழ்வுடன் வாழு,
நலம் அனைத்தும்
எம் வழி நீ கொண்டதால்.
கண்ணுறங்கு என் குழவியே,
புன்னைகையுடன்,
இமைகளை மூடு,
நிலமகள் பாச
தூளி அசைப்பில்.
ஒளி வீசும் செந்நிற ரோசாவை
கண்ணுறு,
என்னிடம் அடைவதைப்போல்,
உலகிடம் உம் எல்லையை
விரிவுபடுத்துவாய்.
கண்ணுறங்கு, என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இறை நிழல் உம்மை தாலாட்ட.
No comments:
Post a Comment