Sunday, December 21, 2008

'தொழில் சங்கம்'

திறக்க வேண்டுமாம்,
மீண்டும் தொழிற்சாலை,
திருவண்டார் கோவிலில்.

வேலை வேண்டுமாம்,
தொழிற்சங்க,
வேலை வேண்டுமாம்.

கழிவுகள் எரிந்தது,
கரவு என்றறிந்தும்,
உறவு சேர்த்திடும்,
கூட்டம்.

ஊர் உரிமை ஒழித்திட,
உலா வரும்,
விஞ்ஞான சமதர்மம்,
விலை பேசிடும்,
அஞ்ஞான அரசியல்
தாங்கிடும்
தொழிற்சங்க மையம்.

மண்ணும், மரமும்,
ஊரும், உயிர்களும்,
மாய்த்திட திட்டமிட்ட
தீ வைப்பு.

கொட்டிக் குவித்திட்ட
கழிவுகள் எரியூட்டி
நேர்ச்சி பழியூட்டி,
கொடுமை.

காற்றாடி வாழ்க்கை,
மக்கள்
நூலும் போச்சு,
இறக்கை கழிவுகள்
எரிப்பில்,

பறந்த வாழ்க்கை,
பறி போன நிலம்,
பாழ்பட்ட வெளி,
ஊழ் வலி அன்று,
உலுத்தர் சதி
இன்று.

கொளுத்திய சதி,
வெளுத்த சங்கம்
'தொழில் சங்கம்'
தோற்கும்!

No comments: