Thursday, January 1, 2009

துயருறும் தாய்

கண்ணுறங்கு, கண்ணுறங்கு
என் மகனே,
கவலையின்றி, அச்சமின்றி,
என் ஆன்மா உறங்காத போதும்,
நான் ஓய்வுறாத போதும்.

கண்ணுறங்கு, கண்ணுறங்கு
இரவில் மெல்லிய
உம் முணு முணுப்பு
பச்சைப் புல் இதழினும்,
ஆட்டுக் கம்பளி பட்டினும்
மென்மையானது.

உன்னுள் என் ஊண் உறங்க
அதனுடன் என் அச்சமும்,
கவலையும்,
உன்னுள் என் விழிகள் மூட
என் நெஞ்சமும் உறங்கட்டும்.

- கப்பிரியேல் மிச்ட்ரல்-( மொழி பெயர்ப்பு)

No comments: