Wednesday, February 18, 2009

சிலம்பொலி வேண்டும்!

ஓயவில்லை இன்னும்
இரத்த வெறி!
இனத்தை துடைத்தொழிக்கும்
'புத்த வெறி'!

தமிழ் இன உணர்வு
வெறியாயின்!
சிங்கள உணர்வு
என்னவாம்?

அமர்க்களம் நிகழ்த்திடும்
சிங்களம்!
அன்றாடம் வீழ்ந்திடும்
எம் சனம்!

மனிதன் இல்லையா?
மானிடமே
சொல்லைய்யா?

காகிதத்தில் பேசியே
கழிந்த காலங்கள்!
ஆயுதத்தில் பேச வைத்தவன்
யார்?

எதிரியின் தீர்மானத்தை
இறுதியாக்கியவன்
எவன்?

உன்னுள்ளிருந்தே உருவான
எதிர்ப்புணர்வு தீயை
மூட்டியவன்
நீ இல்லையா?

போடு இப்போது
என்கிறாய்!
என்ன தருவாய்?
யாது அளித்தாய்?
இதுவரை?
பட்டியல் தருவாயா?

சுடுகாட்டைக் கூட
சொந்தமாக்காதவன்!
இடுகாட்டைக்கூட
இடித்து நிரப்பியவன்!

'பிரிக்காத நாடு வேண்டும்'!
பேரம் பேச!
சோரம் போக!

ஒற்றைத் துருவ உலக
அரசியலில்!
ஓயாதா அவலம்!

ஈழத்து மக்கள்!
படும் துயரம்!
சொற்கள் இல்லை
கூடிடும் சோகம்!

'அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்'!
சிலம்பொலி கேட்க வேண்டும்!
எம் மக்கள் புலம்பொலி
போக்க வேண்டும்!

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

ஆம்.. அங்கே புத்தனுக்கு சமாதி கட்டிக்கொண்டிருக்கிறார்கள் தமிழனின் குருதியை வைத்து.

கொஞ்சம் சம்பந்தப்பட்ட என் பதிவு கீழே..
http://tamizhodu.blogspot.com/2009/02/blog-post_3575.html

உழவன்