Friday, February 20, 2009

இல்லையா?

நீதி மன்றமா?
வீதி மன்றமா?

விதியைக் காக்கும்
மதி!
பதவியை மறக்கலாமா?
பழியை ஏற்கலாமா?

ஒரு மனிதன் பாதுகாப்புக்கு
ஓராயிரம் கவசமா?
அதிரடியா?

ஓட்டாண்டிகள் உரிமை
மீறலுக்கு!
இந்தளவு ஒத்தாசை!
'காக்கி'
அளிக்குமா?

"சட்டம் ஓர் இருட்டறை
வக்கீலின் வாதம்
ஒரு விளக்கு"

விளக்கை அணைத்தவர்
யார்?
எங்களுக்கு
வெளிச்சம் தேவையில்லை!

இருட்டறையே போதும்!
நாங்கள்
திராவிடர் இல்லையா?

No comments: