Sunday, February 22, 2009

முப்பரிமாணம்!

அடிப்பேன்! உதைப்பேன்!
கைகளால்! கால்களால்!
கற்களால்!கனத்த
நெடுந்தடிகளால்!
அதிகாரம் இருக்கு
எமக்கு!

சொற்களால் தாக்கும்
கருஞ்சட்டைக்காரன்!
உமக்கென்ன கற்கள்!
கழிகள்!வண்டிகள்!
கெளரவம்!

துப்பாக்கி உம்மிடம்
உண்டா?
அனைத்தும் எம்மிடம்!

வழக்கு போடுவேன்!
வரிசையாய் நிறுத்துவேன்!
அதையும் தாண்டி
கதையை முடிப்பேன்!

எவன் என்னை கேட்பது!
நானே சகலமும்!

No comments: