Friday, May 1, 2009

முடியாதா?

இத்துடன் முடிந்தது கதை!
எத்துடன்?
நாடளுமன்றத்துடன்
என்பாய்!
சட்ட மன்றத்துக்கு
எழுத முடியாதா?
எழ முடியாதா?

பெரும்பசி!

இனம் அழிகிறது
தினம் தினம்
பினந்தின்னியின் பெரும்பசி
அடங்கவில்லை!

பெரியவர்,சிறியவர்,
பெண்கள்,குழந்தைகள்-
தமிழர்- அனைவரும்,
இரையின் இலக்கு
இலங்கையில்

தாய் மண்ணில்
தாக்குதல்
தாங்கொணாதுயரம்
உலகப் போரும் கண்டதில்லை
இன அழிப்பு பரிமாணம்

தடை செய்யப்பட்ட
ஆயுதங்கள் தடை இன்றி
வெகு மக்கள் மீது
உள்நாட்டில்

உரிமை கோரிக்கை
உயர்த்திப்பிடித்தவர்
உருக்குலைப்பு
ஓட ஓட விரட்டி
கால் நடைகள் போல்

பாசிசமும் கண்டதில்லை
நாசிசமும் விண்டதில்லை
சயோனிசத்தின் ஒளியில்
தம்மம் தடுமாற்றம்

வெறியுடன் நெறி பிறழ்ந்து
மனிதாபி மானம் மறந்து

நேரமா?

"போர் நிறுத்தம்"
எம் சாதனை!

சாவிலும், நோவிலும்
சாய்ந்திடும் நொடியும்
வேதனை வெம்மையும்
வெடிகுழல் பாதிப்பும்
வெளிகளில்
அடிபட்டு மிதிபட்டு,

கவளம் இன்றி
அவலம் சேர்த்து,
அடிக்கொரு மனிதராக
நாள்தோறும்
அக்கிரமத்தின் காலடியில்
நசுங்கிடும் பொசுங்கிடும்
எந்தன் துயரம்

என் தமிழ் நாட்டுத் தலைகளுக்கு
சாதனை !

அவன் கொல்லும் நேரம்
இவர் சொல்லும் நேரமா?