இனம் அழிகிறது
தினம் தினம்
பினந்தின்னியின் பெரும்பசி
அடங்கவில்லை!
பெரியவர்,சிறியவர்,
பெண்கள்,குழந்தைகள்-
தமிழர்- அனைவரும்,
இரையின் இலக்கு
இலங்கையில்
தாய் மண்ணில்
தாக்குதல்
தாங்கொணாதுயரம்
உலகப் போரும் கண்டதில்லை
இன அழிப்பு பரிமாணம்
தடை செய்யப்பட்ட
ஆயுதங்கள் தடை இன்றி
வெகு மக்கள் மீது
உள்நாட்டில்
உரிமை கோரிக்கை
உயர்த்திப்பிடித்தவர்
உருக்குலைப்பு
ஓட ஓட விரட்டி
கால் நடைகள் போல்
பாசிசமும் கண்டதில்லை
நாசிசமும் விண்டதில்லை
சயோனிசத்தின் ஒளியில்
தம்மம் தடுமாற்றம்
வெறியுடன் நெறி பிறழ்ந்து
மனிதாபி மானம் மறந்து
No comments:
Post a Comment