Saturday, August 29, 2009

கோட்டையப்பா?

விடமாட்டோம்
"திமிங்கலங்களை"

ஆமாம்!
வெள்ளையா? நீலமா?

வேட்டை எப்போ?
கோட்டையப்பா?

இழுக்கு யாருக்கு?

வழக்கு மொழி
உரிமை கோரி
வழக்கு தொடுத்தார்

இழுக்கு யாருக்கு?
வழுக்கு அரசியலில்,
வாய்ப் பந்தல் முன்னணியில்.

அடிமை ஆட்சியில்,
ஆங்கிலம் தன் பிடியில்,
தாய் மொழி
தளம் சுருங்கி,

நாய் மொழி,
பேய் மொழி,
நாட்டாண்மை செய்ய,
கூட்டாண்மை கோலோச்ச,

கொஞ்சிடும் மானம்!
கோணல் பேணும்!

அங்கே-இங்கே!

வீழ்ந்தும் வாழும் தமிழன்
-அங்கே
வாழ்ந்தும் வீழும் தமிழன்
-இங்கே
அவன் நிலை - தன் மானம்
இவன் நிலை -அவ மானம்

அவா!

ஓடிய கால்கள்
ஓய்வு கொண்டன,
ஓயாத வாய்
மெளனம் காத்தது.

காட்சிகள் தேடிய
மாட்சி,
இமைகள் மூடி
இறுக்கம் சேர்த்தது.

இதய சுழி
தாளம் சோர்ந்தது,
எண்ண ஓட்டம்
ஏக்கம் சேர்த்தது.

மருத்துவம்,,
இதற்கு மேல் கைவிரித்தது,
அதையும் தாண்டி
இயக்கம்,
அவாவுடன்.......

மனைகளடா...

மரங்கள் மாய்த்தோம்!
செடிகள் சாய்த்தோம்!

நிலங்கள் தூர்த்தோம்!
நீர் நிலைகள் சேர்த்து!

நிம்மதிப் பெருமூச்சு!
நில வணிகம்.

ஊர் விலை கொடுத்து,
நகர் எழுப்பினோம்!
மனைகள் பிரித்து!

"சுத்தமான காற்று
தூய்மையான நீர்
பசுமையான சூழல்"

"எங்கெங்கு காணினும்"
மனைகளடா...

Monday, August 3, 2009

விதி விலக்கா?

அடுக்கடுக்காய் தமிழனம்
அடக்கு முறை தீயில்
அவிந்தனர்
ஆவி துறந்தனர்

மிடுக்காய் மிலேச்சரை
ஒடுக்கு முறையை எதிர்த்து
துடுக்காய் துணிந்து
துயர் துடைக்க
அணிவகுத்தோர் ஆயிரமாயிரம்

துரோக குண்டுகள்
துரத்திட
ஏவல் நாய்கள்
ஏவுகணைகள் விரட்டிட

மானம் காத்து மாண்டனர்
மண்ணின் பெருமை சாற்றி
விண் புகழ் கூட்டினர்

வேலிகளுக்குள்
தள்ளிய காலிகள்
விரட்டி அடித்திட்ட பாவிகள்
துறவாடைக்குள் துமுக்கிகளுடன்
காவல் செய்கின்றார்

இனத்தை அழித்து
இருந்ததை பறித்து
இனமானத்தை அடைத்து

குடிமக்களையே குதறிய
வெறி நாய்கள்
உரிமை தருமா?
உடமை வருமா?

உள்ளூரே பெரும்பான்மையே
எதிராக சதி செய்ய
உடன் உறையும்
நாட்டின் சாட்சி
உலக மன சாட்சி

அனைத்தும்
ஒரு சார்பாக வாதம் செய்யும்
பயங்கரம்!
பயங்கரவாதம்!

அரசு என்ன விதி விலக்கா?

Sunday, August 2, 2009

சேர்க்கும்

ஊடக கருத்தியல்
ஊழல் உளத்தியல்
உரு மாற்றும்
வணிகவியல்

கரு மாற்றி
காசு தேற்றி
பரு போற்றி

மன மாற்றி
தெரு கூட்டும்
நாளும்
குப்பை சேர்க்கும்

உள் வெளி

பாட்டகத்தில் இருந்தாலும்
பூட்டக மாகியதால்
வீட்டகத்திற்கு வரவில்லை
வெளியே

காட்டக அடர்த்தியில்
கனத்த இருளில்
கரைந்தது உள் வெளியில்

மறைந்த உணர்வுகள்
நொடிப்பொழுதும் கடந்த
கடிப்பொழுதில்
வயிற் கதவைத் தட்டும்
இரைச்சலுடன்

சுழல் விசையாக
சூன்யம் கடந்து
சூழல் இசையாக