Sunday, August 2, 2009

உள் வெளி

பாட்டகத்தில் இருந்தாலும்
பூட்டக மாகியதால்
வீட்டகத்திற்கு வரவில்லை
வெளியே

காட்டக அடர்த்தியில்
கனத்த இருளில்
கரைந்தது உள் வெளியில்

மறைந்த உணர்வுகள்
நொடிப்பொழுதும் கடந்த
கடிப்பொழுதில்
வயிற் கதவைத் தட்டும்
இரைச்சலுடன்

சுழல் விசையாக
சூன்யம் கடந்து
சூழல் இசையாக

No comments: