பாட்டகத்தில் இருந்தாலும்
பூட்டக மாகியதால்
வீட்டகத்திற்கு வரவில்லை
வெளியே
காட்டக அடர்த்தியில்
கனத்த இருளில்
கரைந்தது உள் வெளியில்
மறைந்த உணர்வுகள்
நொடிப்பொழுதும் கடந்த
கடிப்பொழுதில்
வயிற் கதவைத் தட்டும்
இரைச்சலுடன்
சுழல் விசையாக
சூன்யம் கடந்து
சூழல் இசையாக
No comments:
Post a Comment