Monday, August 3, 2009

விதி விலக்கா?

அடுக்கடுக்காய் தமிழனம்
அடக்கு முறை தீயில்
அவிந்தனர்
ஆவி துறந்தனர்

மிடுக்காய் மிலேச்சரை
ஒடுக்கு முறையை எதிர்த்து
துடுக்காய் துணிந்து
துயர் துடைக்க
அணிவகுத்தோர் ஆயிரமாயிரம்

துரோக குண்டுகள்
துரத்திட
ஏவல் நாய்கள்
ஏவுகணைகள் விரட்டிட

மானம் காத்து மாண்டனர்
மண்ணின் பெருமை சாற்றி
விண் புகழ் கூட்டினர்

வேலிகளுக்குள்
தள்ளிய காலிகள்
விரட்டி அடித்திட்ட பாவிகள்
துறவாடைக்குள் துமுக்கிகளுடன்
காவல் செய்கின்றார்

இனத்தை அழித்து
இருந்ததை பறித்து
இனமானத்தை அடைத்து

குடிமக்களையே குதறிய
வெறி நாய்கள்
உரிமை தருமா?
உடமை வருமா?

உள்ளூரே பெரும்பான்மையே
எதிராக சதி செய்ய
உடன் உறையும்
நாட்டின் சாட்சி
உலக மன சாட்சி

அனைத்தும்
ஒரு சார்பாக வாதம் செய்யும்
பயங்கரம்!
பயங்கரவாதம்!

அரசு என்ன விதி விலக்கா?

No comments: