Sunday, September 20, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு பகுதி 1

புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மொழி பெயர்ப்பு

அண்மையில் ஒரு செய்தி பத்திரிக்கையில் மனதை சிலிர்க்க வைக்கும் 12 நிழற்படங்கள் வெளியிடப்பட்டன.அதில், மக்கள் நெருக்கம் நிறைந்த அங்காடியின், குறுகிய தெருவில்,இளைஞர் ஒருவன் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின்,பிணமாக ஒப்படைக்கப்பட்டான் எனும் செய்தியும் இடம் பெற்றது.

முன்பெல்லாம் ஆள் அரவமற்ற இடங்களை தேர்வு செய்யும் காவல் துறை, தற்போது பட்டப் பகலில் ஒருவரை கொல்லும் அளவிற்கு துணிவு உடையவர்கள் ஆகிவிட்டனர்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சட்ட விலக்குரிமையே இதற்கு காரணமாக அமைகிறது.இவர்கள் இழைக்கும் கொடுங்குற்றத்திற்கு தண்டனை ஏதும் இல்லை.தண்டனை இருந்தால் மூடிய அறைக்குள் மோதல் சாவு நிகழ்த்த மாட்டார்.

மோதல் சாவு கொடுமைகள் அகில இந்திய அளவில் காவல்துறையின் விருப்ப ஆர்வ நடவடிக்கையாக மாறியுள்ளது.எதிரெழுச்சியினர் உள்ள பகுதிகளான, மத்திய பகுதி, வட-கிழக்குப் பகுதி மற்றும் காசுமீர் போன்ற இடங்களில்,பாதுகாப்பு படைக்கும், எதிரெழுச்சியினருக்கும் நடக்கும் சண்டையில், வழக்கமான இழப்புகளாக, மோதல் சாவுகள் உள்ளது.
மோதல் சாவுகள் என்று அறியப்படுகிற நிகழ்வுகள் இப்பகுதிகளில் அன்றாட செய்தியாக உள்ளது.

இதற்கு சட்டம் நிர்ணயித்துள்ள முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகளும் பின் பற்றப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் மோதல்சாவு சம்பவத்திற்கு பிறகு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.மோதல் சாவு கொலை நிகழ்த்தும் காவலருக்கு மட்டும் பரிசுப்பணம் அளிக்கப்படும்.

ஒரு தகவல் அறிக்கையின் படி, ஆந்திர மாநிலத்தில் அதன் அரசாங்கம்,ஓராயிரம் எதிரெழுச்சியினரின் தலைகளுக்கு 16 கோடி உரூவாக்கள் பரிசுப் பணமாக, உரூவாய் 20000 த்திலிருந்து 12 இலட்சம் வரை,அறிவித்துள்ளது.


உத்தரப் பிரதேசம் வன்முறையாளர் செயல்பாடற்ற மாநிலம், 2006-07ல், 201 மோதல் கொலை சாதனை நிகழ்த்தியுள்ளது!உத்தரகண்ட் மாநிலம் தன் பங்கிற்கு 2006ல் 23 மோதல் கொலையும், 2007ல் 10 மோதல் கொலையும் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது!

No comments: