Sunday, September 13, 2009

தகவல் தொழில் நுட்ப(திருத்த) சட்டம்,2008ம் சிவில் உரிமைகளும் பாகம் - 2 மொழி பெயர்ப்பு


முன்னர், இந்திய தொலைத் தொடர்பு சட்டம், 1885ன் கீழ், பொது பாதுகாப்பு நலன்கள் சம்பந்தமாக அரசாங்கம், முறையற்ற முறையில் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் அதனை இடை மறிப்பு செய்வது குறித்து, எச்சரிக்கை ஏற்பாடுகள் உருவாக்க வேண்டும் என விதிக்கப் பட்டுள்ளது.


ஆனால், இதுநாள் வரையில் எந்த அரசாங்கமும் எவ்வித நடைமுறையும் உருவாக்கிட அக்கறை காட்டவில்லை.காரணம், அனைத்து அரசும், எதிர்க் கட்சிகள் தகவல்களை ஒற்றாடுவது ,இயன்றால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் வேவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறது.


1996ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 1885ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தை பயன்படுத்தும் போது அரசாங்கம் கடை பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை வகுத்தது.இவ்வாறு, முதன்முறையாக ஒரு ஒழுங்கை அரசாங்கம் தொலைபேசி ஒட்டு கேட்பதில் அமுல்படுத்த உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியது.


மேலும், நாட்டின் இறையாண்மை,பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் அந்நிய நாடுகளின் உறவு தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என சுட்டியது.பொது ஒழுங்கு நிலை நாட்ட, ஒரு குற்றம் இழைக்க தூண்டுவது போன்ற நேர்வுகளிலும் ஒட்டு கேட்கும் அதிகாரம் செல்லுபடியாகும் என்றது.


எனினும்,ஒட்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலர் அல்லது மாநில அரசின் உள்துறை செயலர் எழுத்து மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதில் எவ்வகையான தகவல் ஒட்டு கேட்கப்படவேண்டும் என்பதும் தெளிவாக குறிக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாக்கப் பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, நீதி மன்றம் இவ் உத்தரவு சம்பந்தமாக மீள் பார்வை குழு ஒன்றும்,அமைச்சரவை அலுவலக செயலர்,சட்டத் துறை செயலர், மற்றும் தகவல் தொடர்பு செயலர் ஆகியோரை உள்ளடக்கி மத்திய அரசு மட்டத்திலும்,இணையாக மாநில அரசு மட்டத்திலும் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிய செயல்பாட்டு உத்தரவை ரத்து செய்து, இடை மறித்து எடுக்கப்பட்ட தகவல்களை அழித்துவிடலாம் எனவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.தகவல் தொழில் நுட்ப (திருத்த) சட்டத்தில் இவ்வகை நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்துவது குறித்து இடம் பெற்றிருந்தாலும் தற்போது அரசாங்கம் இதற்கான ஒழுங்கு முறைகளை உருவாக்கும் என்று தோன்றவில்லை.

அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின், அசல் சட்டத்திலேயே அதற்கு உரிய அம்சங்களை சேர்த்து சட்டத்தை உருவாக்கி இருக்க முடியும்.ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்திலேயே இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை உருவாக்காத அரசாங்கம், 60 ஆன்டுகள் கழித்து உச்ச நீதி மன்றம் தலையிடும் வரை செயலற்றுக் கிடந்த அரசாங்கம் தற்போது மக்கள் பேச்சு உரிமை , கருத்து உரிமை காத்திட முனையும் என்பதில் நம்பிக்கை இல்லை.

பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாத இச்சட்டம் மக்களின் தகவல் பரிமாற்றத்தை அவர்கள் அறியாமலே அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து கண்காணித்திடும்.சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பே ஓர் அறிக்கையில் 'மின்னணு காவல் அரசு' என்னும் தலைப்பில்,52 நாடுகளின் ஆய்வில் இந்தியா 20வது இடத்தை பிடித்துள்ளது.பிற நாடுகளில் சில,சீனா,வட கொரியா, உருசியா, சிங்கப்பூர் ஆகியன.

குறிப்பாக இச்சட்டம் என்பது குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கு நஞ்சு அளித்திடும் சட்டம்.பொறுப்பற்ற காவல்துறையின் கைககளில் இது இந்தியாவை,'1984ஆம் ஆண்டு ஆர்வெலியன் தேசமா'க மாற்றி விடும்.

No comments: