Wednesday, September 30, 2009

மாட்டாங்க!!

குண்டி கழுவ தண்ணி இல்ல!

குடும்பத்துடன் வாழ நாதி இல்ல!

பசி அடங்கி நாளாச்சு!

பாழும் உறக்கமும் போயாச்சு!

பொறந்த தாச்சும் பொழச்சிடாதா

பொங்கி திண்ண வாய்ச்சுடாதா

ஒரு வா அரிசி உள்ள தள்ள முடியல

கலர் டி.வி. குடிசையில

காட்சி பார்க்க முடியல

கரண்டுக்கு எங்கே போவேன்

மண்ணென்னய் அடுப்பு எரிக்க

மனசிருக்கு

சோத்துக்கடை பொட்டலம்

காத்து கிடக்கு பிள்ளைக

சோளி ஏதும் போனா

காலி இல்ல வயித்துல

குப்பை பொறுக்க கோணி பை

மழைக் காலம் வரும் முன்

வேல பாக்க போகனும்

கூவமும் சரியானா

எங்க வாழ்வு எங்கு போகும்

சருவுதான் அப்பவும்

வுட்டு வக்க மாட்டாங்க

No comments: