Friday, September 18, 2009

சார்ந்து நிற்பேன்

உன் மொழியில் பேச

உரிமை இல்லை

உன் நாட்டில்

உனை தேர்ந்தெடுத்த

மக்கள் மொழியில் பேச

மக்கள் மன்றத்தில்அனுமதி இல்லை

மக்கள் நாயகமா?

நக்கல் நாயகமா?


காந்தியின் தேசம்

காந்தியைத்தான் மறந்தது

அவர் கருத்தையுமா?

தமிழ் மொழி பெருமைஅறிந்த காந்தி

தாய் மொழி அருமை உணர்ந்த காந்தி

பிதாவிற்கு துரோகம்

மீண்டும் மீண்டும்

எல்லாம் சரி

மாநாடு போட்டு

மரியாதை சேர்ப்பேன்

உள்ளூர் அல்ல

உலகத் தமிழ் மாநாடு

செந்தமிழ் தகுதி

செம்மொழி தகுதி

சாதனை செய்தேன்

சரித்திரம் படைத்து

பேசினால் தானே சிக்கல்

இனி பேசாது

பெருமை காத்து

செயல் ஒன்றே

சமணப் படையில்

சார்ந்து நிற்பேன்

No comments: