Monday, September 28, 2009

மரபு

இசுபானிய கவிதை -அல்போன்சினா இசுடோர்னி

(மொழி பெயர்ப்பு)

என்னிடம் கூறினாய்:" என் தந்தை அழவில்லை,

என் தாத்தாவும்"

"எம் இனத்தவன் எவனும் இதுவரை அழவில்லை"
"அவர் எ..கின் உறுதி உடையவர்"

நீ கூறியது கேட்டேன் யான்

நடுங்கும் எம் வாயில் உணர்ந்தேன்

நும் கசப்பான கண்ணீர்த் திவளை

நஞ்சின் வீழ்ச்சியை

எம் உதடுகள் இது நாள் வரை சுவைத்திடாத

மிக மோசமான அமிழ்தம்

சிறிய கோப்பையினுள் இருந்து

நலிவுடன் பிறப்பெடுத்தாள்

துயரங்கள் துய்த்திட

முடிவற்ற காலங்களின் வலி

உய்த்துணர்ந்தேன்

அட,

மகிழ்வற்ற என் ஆன்மா

அதன் நிறையை தாங்க இயலவில்லை

No comments: