Saturday, September 26, 2009

போனதா?

துரித கதியில் துடுப்பாக

பாயுந்தில்

பகல் வெயில் பயணம்

குறுக்கும் நெடுக்குமாக

குதறும் வாகனங்கள்

கதறும் நடை வாசிகள்

முந்திச் செல்லும் முடுக்கம்

மக்கள் நெருக்கம்


பகடு மேல் ஊர்வலம்

வெளிப்பட்ட வாசம்

வேதனையின் சுவாசம்

பழக்கப்பட்ட மணம்

பாதையின் கரி வளியை

மிஞ்சி

கதுறும் உடல்களுடன்

துடிக்கும்

துண்டு துண்டாக

கண்டு நோகும்

கவலையும் கூடும்

போவார் வருவார்

போதையில் பாதையில்

போகும் வண்டிகளில்

இதுவும் ஒன்று

என்று


இயல்பாய் பசையற்று

நசை வாழ்க்கையின்

நாகரீக சேர்க்கையில்

மாண்ட உயிர் அணிவகுப்பில்

திரளும் மனிதம்

மர உயிர் மாய்ப்பில்

மரை

கழன்று போனதா?

No comments: