Wednesday, September 30, 2009

காத்திடு

சிகப்புத் துண்டு தோழா!

அலுப்பு கண்ட தோழா!

சலிப்பு கொண்ட வாழ்க்கை

சரிதானா தோழா!

இளிப்பு கொண்ட அரசியல்

கணிப்பு மாற்று தோழா!

கடமையாற்று தோழா!

காலம் நமது தோழா!

கடினம் ஆயினும் தோழா!

கடிதே ஏகிடு தோழா!

காலம் வெல்லும்

கலகம் கருத்தினுள் கொண்டு

கலக்கம் போக்கிடு தோழா!

மாற்றம் என்பது தோழா!

மாறாத விதி என்பது

மீறாத வழி நில் தோழா!

சாயாத கோல்

சருக்காத பாதை

நேரான செயல்

நினைவில் நிறுத்து தோழா!

நேசம் போற்றி தோழா!

மக்கள் தேசம் காத்திடு

தோழா!

No comments: