Friday, January 15, 2010

அகத்தில்!

முடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உம் செயல் பாட்டு வளையத்தில்
நான் இல்லை!

அடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
எம் செயல்பாட்டுக்குள்
வளையம் இல்லை!

ஒடுங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உன் ஒடுக்கு முறைக்கு பயந்து
உம் அமைப்பின் வெளியே
சுயமாக!

குன்றி விட்டாய் என்றாய்!
ஆம்!
நயத்தக்க நாகரிகம் வேண்டி
அகத்தில்!

No comments: