இலத்தின் அமெரிக்க தீவு நாடான எயித்தியில், நில நடுக்கம்.இரண்டு இலட்சம் உயிர்களைப் பறித்தது.பல இலட்சம் மக்களின் வாழ்க்கை ஆதாரமே சிதைந்து, சின்னா பின்னமானது.
குடிக்க நீர், உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு, யாவும் இன்று அந்நியமாகியுள்ள அவலம். சில ஆண்டுகளுக்கு முன் சூறைக் காற்றில், சுழன்ற அவர்கள் வாழ்க்கை, இன்று மீண்டும், இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்துள்ளது.
அண்டை நாடுகளின் உதவிக் கரங்கள், விரைவாக சேர முடியாத அவலம்.இயற்கையின் அடிக்கு இரையான உயிர்கள், சிதைந்து கட்டிடங்களுக்கிடையில், அப்புறப் படுத்திட, கெளவரமாக அடக்கம் செய்திட வாய்ப்பில்லை.
அமெரிக்காவில் வசிக்கும் எயித்தியின் பெண்மணி கூறுகிறார்,"என் உறவினர் உடலாவது கிடைத்தது, ஆனால் உடல்கள் கிடைத்திடாத என் இன மக்கள் துயரம் பெரியது".
போர் என்றால் அதி விரைவாக, மின்னலை விஞ்சும் தாக்குதல் மூர்க்கம்,உடனடி அழிவுக்கு ஏங்கும் போர் வியூகம், தொழில்நுட்பம், அணி சேர்க்கை, இராணுவ நடவடிக்கை, இயற்கை பேரழின் போது தாமதம் ஆவது ஏன்? எப்படி?
அழிவாற்றலில் முனைப்போடு,பிணைப்போடு செயல்படும் அறிவாற்றல், உயிர்காக்கும் செயல்களில் சுறு, சுறுப்பு எங்கே?
உலக சமுதாயம், நாகரிக சமூகம் பதில் கூறுமா?
பாதித்த மக்கள் மறு வாழ்வு விரைந்து நடக்குமா?
No comments:
Post a Comment