"கா கா கா
கா கா கா
கா கா கா......"
கேவி அழைத்தார்
பண்ணிய பலகாரத்துடன்
புண்ணியம் தேடி
எதிர் வீட்டுக்காரர்
புதிராக
வீதியில் இறங்கி
எந்தன் வீட்டில்
காகா
அழையாத விருந்தாளி
அன்றாடம் குடும்பத்துடன்
குட்டி அணில்களுடன்
எதிர் எதிராக
வழி விட்டு கொரிக்கும்
பின் வீட்டு புறாக்களும்
தம் கூட்டைவிட்டு
எம் வீட்டில்
சுற்றி வந்து விரட்டும்
அணிலும் காகமும்
அலுத்துப் போய்
ஆகாரம் பகிர்வு
அன்றாட நிகழ்வு
அடுக்களைப் பின்
No comments:
Post a Comment