Saturday, April 24, 2010

சிறார்:?

திரைமறைவில் இருந்து
தினந்தோறும்
செவிகளைத் தந்து
சேதிகள் பெறுவார்!

மன்னிப்பு அளித்திடும் மனு
பரிந்துரை செய்வார்!

தம்மிடம் புகலிடம்
தேடிய
ஆண்டவனின் குழந்தைகள்
உள்ளத்தைக் காட்டியபோது
அவர் உடலையும்
பார்த்தவர்!

கால் நூற்றாண்டு கடமையுடன்
நெறி நின்று
வெறி வென்றவர்!


'வாடிகன்' புகார் பெட்டியும்
திறக்கவில்லை!
பெண் துறவியரை
கண்காணிக்கும் எந்திரம்!
கடல் கடந்து
செர்மனிக்குள் செல்லவில்லை!
குழந்தைகள் மீதான வன்மத்தில்!


பெண்கள்:
விலா எலும்பின் பிறப்பு
சிறார்:?

No comments: