Monday, May 24, 2010

வழியில்லையா?

இருக்கும் மொழியே எட்டவில்லை
எங்களுக்கு
பேச்சிலே அதன் மூச்சிலே
வாழ்கிறோம்
பேதமை பெற்றியாக
போதனை ஏதுமின்றி

கல்விச் சாலைகள்
எம் புல காட்சியாக

காதில் விழுகிற சேதி
புரியவில்லை

எமக்கு சீர் திருத்தமாம்
ஊர் திருத்தும் மாந்தர்
உளறல்

புதுமையாம்
கணினி உலகுக்கு
கை கொடுக்குமாம்

படித்தவரே பதைக்கிறார்
"உள்ளதும் போகும்
நொள்ள கண்ணா"
என்கிறார்

உருப்படியாய்
எம் மக்கள் இருக்கும்
மொழி
கற்றிட

அதன் வழி நின்றிட
வழியில்லையா?

No comments: