Tuesday, May 25, 2010

சவாரி

அவன் பார்த்தான்
கடந்து
நான் பார்த்தேன்
தொடர்ந்து
நான் பார்த்ததை
அவன் பார்க்கவில்லை

அவள் பார்த்ததை
நான் பார்த்தேன்
அவனும் நானும்
பார்த்ததை
அவள் பார்த்தாள்

பரபரப்பு போக்கில்
சுற்றிலும் சுழலும்
விழிகள்
வாகனத்தில்
வலம்

உணர்ச்சி விசையில்
உந்துதல் முயற்சியில்
ஊர்வலம்

ஒருவரை ஒருவர்
முந்தி
உடன் இருப்பவர்
குந்தி

எறும்பும் ஏலனம் செய்யும்
சாரி
குறும்பு சவாரி

1 comment:

க.பாலாசி said...

நல்லாருக்குங்க கவிதை....