Saturday, June 5, 2010

தீருமா!

எவர் செய்தாலும் ஏற்கமாட்டோம்!
மக்கள் உயிர் எடுக்கும் செயல்
ஒப்பமாட்டோம்!

உடமை அழிப்பு
உயிர் அழிப்பு
கடமை என்றாகுமா!
கொள்கை என்றாகுமா!

மாற்று அரசியல் வைக்கும்
வழிமுறை
மனிதருக்கா!
மயானத்திற்கா!

அனைவரும் இழந்த வெற்றிடம்
வேதனை இடம்
சாதனை என்றாகுமா!
சரித்திர புகழாகுமா!

தரித்திரர் நிலை உயர்த்துமா!
சந்ததி இழப்பு
அனாதை குழவி
நிலை தேறுமா!

கவர்ச்சி அரசாங்கம்
முயற்சி அறிவிப்புகளத் தாண்டுமா!
அல்லல் தீருமா!
சன்னல் திறக்குமா!

புது வெளிச்சம் காற்றுடன்
புழுக்கம் தீர்க்குமா!
மக்கள் இறுக்கம் போக்குமா!

வருந்தும் மாந்தர் வாழ்க்கை
வாட்டி வதைத்திடும்
அவலம் தீருமா!

No comments: