Wednesday, June 9, 2010

சோங்கிடாதே!

"காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்....."

மாகாணியில் அரிசி இல்லை
மாகாளி தருவாளா?

அட்டை எடுத்து வா
ஒரு ரூபா அரிசி
ரேசன் கடையிலே
ரோசமுடன் வாங்கிப் போ!

உண்ண முடியாதே அய்யா!

விற்க முடியாதா,
அண்ணே!

விருப்பம் உமக்கில்லை
விற்பனையாளர் வீட்டிற்கே
வருவார்!

விலாவாரியாக சொல்வார்
கூடுதல் சில்லரை
குமட்டும் அரிசிக்கு!

சிமிட்டு வியாபாரி
சீராக சேகரித்து
அடுக்கும் தொழில்
எல்லைகளைக் கடந்து!

தீட்டி உம்மிடமே
மறு சுழற்சி
வண்ணப் பைகளில்
வலம் வரும்!

வாங்கி உண்பாய்
சோங்கிடாதே!

No comments: