Wednesday, July 13, 2011

மூச்சும் பேச்சும்
முணகலும்
முழிப்பும்

வேகமும் சோகமும்
தாகமும் தவிப்பும்

தகிப்பும்சகிப்பும்
சமாதானம் ஏற்குமா!

இவ்வளவும் புரியவில்லை
என்றாய்
எவ்வளவுதான் புரிந்தாய்!

எள்ளளவு என்றாலும்
எண்ணெய் ஆக
வேண்டாமா!

எழில் தீபம்
ஏற்ற வேண்டாமா!

வெண்ணெய் திரளும்
தாழியாய்
மண் கலம் நிறைய
வேண்டாமா!

மனசு குளிர
வேண்டாமா!

சின்ன ஆசை என்றயே!
பெரிய ஆசை ஏற்பாயோ!

அரிய ஆசை
இதுவன்றி
பெரிய ஆசை
பிற ஏது?

No comments: