கோபம் குறைத்திடு
வேகம் தவிர்த்திடு
தாகம் போக்கிடு
தவிப்பு நீக்கிடு
உள்ள நிலை உணர்ந்திடு
உலகியல் புரிந்திடு
உன்னைப் பற்றி
உலவும் சேதி
உதறி நின்றிடு
உண்மை புரிந்திடு
காலம் வென்றிட
கவனமுடன் நடந்திடு
கரைந்திடும் புற்றென
இரைந்திடும் மனிதர்
இளிமுகம் தெளிந்திடு
குறைந்திடும் வளம்
காத்திடு
குணத்தில் சென்றிடு
கோணல் நிமிர்த்திடு
குவலயம் கண்டிடு
No comments:
Post a Comment