Saturday, July 16, 2011

கோபம் குறைத்திடு
வேகம் தவிர்த்திடு

தாகம் போக்கிடு
தவிப்பு நீக்கிடு

உள்ள நிலை உணர்ந்திடு
உலகியல் புரிந்திடு

உன்னைப் பற்றி
உலவும் சேதி

உதறி நின்றிடு
உண்மை புரிந்திடு

காலம் வென்றிட
கவனமுடன் நடந்திடு

கரைந்திடும் புற்றென
இரைந்திடும் மனிதர்

இளிமுகம் தெளிந்திடு

குறைந்திடும் வளம்
காத்திடு
குணத்தில் சென்றிடு

கோணல் நிமிர்த்திடு
குவலயம் கண்டிடு

No comments: