Sunday, December 4, 2011

அன்றாடம்

எங்கள் வீட்டில் காகம்
அழைக்கத் தேவையில்லை
காலையில்

சேவலுக்குப் பதிலாக
சேவகம்

சமையலறைக்குள் உரிமையுடன்
சமயங்களில்

அப்புறம் என்றில்லாமல்
அப்பளம், வத்தல்

கட்டணம் இல்லாமல்
சுட்டவுடன்

ஒப்பனை ஒழுங்கு பார்க்க
ஓடாமல்
முகம் பார்த்து

ஆடிமுன் ஆடி, ஆடி
அலகால் கொத்தி, கொத்தி

அழகு பார்க்கும்
குருவியும்

அண்டை வீட்டில் வளர்க்கும்
புறாவும்

காகத்தைப் பார்த்து
தாகம் தேக்கி

புழுக்களைத் தேடி
பதைக்கும்

அண்டி வாழும் அணிலும்
இவர்களின் போட்டியில்

இறங்கும், ஏறும்
கொரிக்கும்,குதிக்கும்

இன்னலை எண்ணி
விரையும், மறையும்

இவர்களைத் தாண்டி
பதுங்கும்,பிதுங்கும்
விழிகளுடன்

இருளின்,இருளாக
பூசை
ஆசையுடன்

இரவு நேரங்களில்
உறக்கத்தை உதறி
உற்சாகமாக

மெல்ல அடி எடுத்து
ஒலிக்கும் வலி நேராமல்

சமயற் கட்டில் சஞ்சரிக்கும்

கறுப்பு பூனை என்றாலே
வெறுப்பு,பயத்துடன்

குழந்தைகள் அவர்களுடன்
குக்கலும் சேர்ந்து

விரட்டும்
மொட்டைமாடி வரை

இல்லக் காட்சி
அன்றாடம்!

No comments: